கன்னியாகுமரி: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகே இளங்கடையில் தேவாலயம், பள்ளிவாசல், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை இயக்கி வருகிறது. இந்நிலையில் இதன் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருவதால் அதனை, அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day