கன்னியாகுமரி: தீ விபத்தில் 15க்‍கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் படகுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ மக்கள், தங்களது படகுகளை கடற்கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். அதன் அருகே குவிந்து கிடந்த குப்பைகளில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த படகுகளுக்‍கும் மளமளவென பரவியது. இதில் 15-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமடைந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், தீயை அணைக்‍க முடியாமல் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படகுகளின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day