கன்னியாகுமரி: 20 ஆண்டுகால கோரிக்கையை கண்டு கொள்ளாத அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே 20 ஆண்டுகளாக சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததால், கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர். வெள்ளங்குழி பகுதியில் இருந்து மூவாற்றுமுகம் செல்லும் சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செப்பனிடப்படாமல் உள்ளது. இதனால் குண்டும் குழியுமாக உள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 2 முறை கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். 

Night
Day