கரூர்: "எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" என வீட்டில் பேனர் வைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என வீட்டில் டிஜிட்டல் பேனர் ஒட்டியுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும், அவரது மனைவி செந்தில்வடிவு கரூர் உதவி வேளாண்மை அலுவலராகவும் பணியாற்றி வருகின்றனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இவர்கள் தங்களது வீட்டின் முன்பகுதி மற்றும் பின் சுவற்றில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர். இதுகுறித்து பேசிய ஆசிரியர் செந்தில் குமார், தேர்தலில் வாக்களிப்பதும், ஆட்சியாளர்களை முறையாக தேர்ந்தெடுப்பதும் நமது கடமை என கூறினார். 

Night
Day