கரூர்: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்திகிராமம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதே பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளை அமைத்து தருவதற்கு மேலும் தாமதப்படுத்தினால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Night
Day