கல்பாக்கம் அருகே நடுக்கடலில் மிதந்து வந்த பேரல் - போலீசார் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலில் மிதந்து வந்து பேரலை மீட்டு மீனவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினத்தில் நடுக்கடலில் மர்மமமான முறையில் இரும்பு பேரல் ஒன்று மிதந்துள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் 5 படகுகளின் உதவியோடு கயிற்றில் கட்டி அதனை கரைக்கு இழுத்து வந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், பேரலை திறந்து பார்த்தபோது அதில் ஆயில் இருந்தது தெரிந்துள்ளது. இதையடுத்து பேரலை ஆய்வுக்காக காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day