கல்லூரில் மக்களின் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லூர் பகுதியில் நின்று கொண்டிருந்த நடுக்கல்லூர் பகுதி மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர். அவர்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா பொறுமையாக கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, இப்பகுதி மக்‍கள் தங்கள் குறைகளை தன்னிடம் எடுத்துக்‍கூறியதாக தெரிவித்தார். 

இங்குள்ள மக்களுக்கு வீட்டுக்கு பட்டா கொடுப்பதாக சொல்லி தற்போது வரை தரவில்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையைத் தரவில்லை என்றும், குடிநீர் பிரச்சனை பெருமளவில் நிலவுவதாகவும் மக்‍கள் தெரிவித்ததாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார். 


Night
Day