கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

நெல்லையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் மது குடிக்க அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறிய நிலையில் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகாரால் தங்களது மகளின் எதிர்கால படிப்பு கேள்விகுறியாகும் என்ற அச்சத்தில் புகாரை பெற்றோர் திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை பூதாகரமாக மாறிய நிலையில் பேராசிரியர் பிராங்கிளினை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவான மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

Night
Day