கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 60-ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாரயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 12 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day