கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோருக்கு சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர் நேரில் ஆஜாராக ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கருணாபுரம், மாதவசேரி, சேஷமுத்திரம் ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 68 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்ட நான்கு பேருக்கு வருகிற 28ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 

Night
Day