கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவமனையில் கழிவறை சுத்தம் செய்யும் நபர் செவிலியராக பணி உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் கழிவறை சுத்தம் செய்யும் நபர் செவிலியராக பணி உயர்வு பெறுவதாக தலைமை மருத்துவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜ்மோகன் மருத்துவமனையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது 8 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 5 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும், 8 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 5 செவிலியர்களே இருப்பதால் கழிவறை சுத்தம் செய்யும் நபர் செவிலியராக பணி உயர்வு பெறுகிறார் என்று தலைமை மருத்துவர் கூறினார்.

Night
Day