கள்ளக்குறிச்சி: அரசு விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் அரசு விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு திமுக நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அம்மாபேட்டையில்  நடைபாதை, காரியமேடை உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் வருகை தந்தனா். அப்போது, அவா்களுக்கு ஆரத்தி எடுப்பதற்காக அங்கு கூடியிருந்த பெண்களுக்கு தங்கள் செலவிலேயே தட்டு வழங்கப்பட்டது. அதனை அவா்கள் முண்டியடித்துகொண்டு வாங்க முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விழா நிறைவில் பொதுமக்களுக்கு திமுகவினர் பணப் பட்டுவாடா செய்தது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day