கள்ளக்குறிச்சி: அரசு விழா அழைப்பிதழில் ஆட்சியர் பெயரை கடைசியில் போட்டு அவமதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் அரசு விழா அழைப்பிதழில் நகராட்சி நிர்வாகம் ஆட்சியர் பெயரை கடைசியில் போட்டு அவமதிப்பு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏமப்பேர் பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக குளம், பூங்கா, சிறுவர்களுக்கான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் திறப்பு விழா அழைப்பிதழில் அமைச்சருக்கு அடுத்தபடியாக இடம்பெற வேண்டிய ஆட்சியரின் பெயர், கடைகோடியில் உள்ளது. அதாவது அமைச்சர், நகரமன்றத் தலைவர், நகராட்சி ஆணையாளருக்கு அடுத்தபடியாக ஆட்சியர் பெயர் உள்ளது. மாவட்ட ஆட்சியரை திட்டமிட்டே நகராட்சி நிர்வாகம் அவமதிப்பு செய்துள்ளதாக விழா அழைப்பிதழை சமூக ஆர்வலர்கள் வலைதளங்களில் பதிவிட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Night
Day