கள்ளக்குறிச்சி: ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவருக்கு மிரட்டல் - பெண் ஆட்டோ ஓட்டுநர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தலைவரை மிரட்டியதாக பெண் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி என்கிற ராணி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் ஏமப்பேரி பகுதியில் பயணிகளை ஏற்றியபோது, அங்கிருந்த கள்ளக்குறிச்சி நகர ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தலைவர் ஆனந்தன், தங்கள் பகுதியில் பயணிகளை ஏற்றக்கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணி, 'தான் எங்கு வேண்டுமானாலும் பயணிகளை ஏற்றுவேன்' என்றுகூறி ஆனந்தனை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து ராணியை கைது செய்தனர்.

Night
Day