கள்ளக்குறிச்சி: இறந்த தந்தையை மெழுகு சிலையாக திருமணத்தில் பங்கேற்க வைத்த மகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விபத்தில் இறந்த தந்தையை மெழுகு சிலையாக வடிவமைத்து தனது திருமணத்தில் பங்கேற்க வைத்த மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பரசு என்பவருடைய தந்தை சங்கர், 2 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அன்பரசுக்கும் சந்தியா என்ற பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்தில் தந்தையும் இருக்க வேண்டும் என எண்ணிய அன்பரசு, தந்தையை மெழுகு சிலையாக வடிவமைத்து அனைத்து வித சடங்குகளிலும் பங்கேற்க செய்துள்ளார். அவரது செயல் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day