கள்ளக்குறிச்சி: சொத்தை எழுதி தரக்கூறி மூத்த மகனை தாக்கிய உறவினர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அருகே சொத்தை எழுதி தரக்கூறி மூத்த மகனை, தந்தை மற்றும் உறவினர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது தந்தை ஏழுமலை மற்றும் தாய் காந்திமதி காதல் திருமணம் செய்துகொண்டதால், தாத்தா முத்து தங்கள் குடும்பத்தினரை ஒதுக்கிவைத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தாங்கள் வசித்து வந்த இடத்தை தங்கள் பெயருக்கு மாற்றிதரக் கூறி தாத்தா முத்து மற்றும் சகோதரர்கள், தனது தந்தை மற்றும் தாய் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். காவல்துறையினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தனது தந்தையை கைது செய்து, 10ம் வகுப்பு படிக்கும் தனது தம்பி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக்கூறி, உரிய நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

varient
Night
Day