கள்ளக்குறிச்சி: பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களை தாக்கிய முன்னாள் மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமையன்று பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவின்போது கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் அங்கிருந்த மாணவர்களை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் , முன்னாள் மாணவர்கள், தற்போது பயின்று வரும் மாணவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த  மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முன்னாள் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

varient
Night
Day