கள்ளச்சாராயம் குடித்து கணவன், மனைவி உயிரிழப்பு - நிற்கதியாய் நிற்கும் 3 பிள்ளைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கணவன், மனைவி உயிரிழந்த நிலையில், அவர்களது 3 பிள்ளைகள் நிற்கதியாய் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சுரேஷ்-வடிவுக்கரசி தம்பதியினரும் உயிரிழந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், பிள்ளைகள் மூவரும் தாய், தந்தையின்றி நிற்கதியாய் நிற்கின்றனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு சார்பில் வீடு கட்டி கொடுத்து, 3 பேரின் கல்வி செலவை ஏற்று கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day