கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலி - சின்னம்மா வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 12 பேர் உயிரிழந்துவிட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கும் நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ம.சுரேஷ், பிரவீன், த.சுரேஷ், சேகர், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, மணி, வடிவு உள்ளிட்ட 12 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று வரும் செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாகவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்..  

இதுவரை, 65க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிய வருகிறது - சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார் 

இதே போன்று, கடந்த ஆண்டு மே மாதம் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு நாட்களிலேயே 21 நபர்கள் பலியாகினர்- திமுக தலைமையிலான அரசு இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் இத்தகைய மரணங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன- திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது- தடுத்து நிறுத்த வேண்டிய திமுக தலைமையிலான அரசோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது- திமுகவினரின் அலட்சியப் போக்காலும், மக்களை பாதுகாக்க கூடிய எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலும் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்று வேதனையாக இருக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்..

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்ட தேவையான நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று திமுக தலைமையிலான அரசை கேட்டுக் கொள்வதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day