கள்ளச்சாராய வழக்கு விசாரணையை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், அனைத்து மனுதாரர்களுக்கும் பதில் மனுக்கள் வழங்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Night
Day