கள்ளச்சாராய விவகாரத்தில் கைது எண்ணிக்கை 22-ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 65 பேர் பலியாகினர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகள் 11 பேரை சிபிசிஐடி போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சேஷமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை என்பவரிடம் விசாரணை நடத்தியதில், திமுக பிரமுகர் வேலுவும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Night
Day