கழகத்தை தலைமையேற்று வழிநடத்த வாருங்கள் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தொண்டர்கள் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைய அழைப்பு விடுத்து சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றவும், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை, எர்ணாவூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் அஇஅதிமுக பொதுச் செயலாளார் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 14வது வட்ட கழக செயலாளர் ஜெபஸ்டின் ஏற்பாட்டில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தொண்டர்களே இன்னும் துரோகிகளை நம்பி இருக்காதீர்கள் சின்னம்மாவை நாடி வாருங்கள் என குறிப்பிட்டுள்ளனர். 

Night
Day