கழகத்தை தலைமையேற்று வழிநடத்த வாருங்கள் - சின்னம்மாவுக்கு, தொண்டர்கள் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து விழுப்புரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அஇஅதிமுக பிளவுபட்டுள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றிடவும், ஒற்றுமையுடன் வழி நடத்திடவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்து, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரம் நகரில் உள்ள கிழக்கு பாண்டி சாலை, காந்தி சிலை, திருவிக வீதி, நேருஜி வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம், பிரிந்திருக்கும் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம் என வேண்டுகோள் விடுத்து போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Night
Day