கழகத்தை தலைமையேற்று வழிநடத்த வாருங்கள் - நாமக்கல் தொண்டர்கள் சின்னம்மாவுக்கு அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தை வழிநடத்த வேண்டி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கழக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பேனர்களை வைத்துள்ளனர். ராசிபுரம் நகர பொறுப்பாளராக எஸ். வேலுச்சாமியை நியமித்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கும்,  பரிந்துரை செய்த நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் அவர்களுக்கும் மற்றும் தமிழக முன்னாள் அரசு கொறடா பி.எம். நரசிம்மன், முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து ராசிபுரம் நகர பொறுப்பாளர் எஸ். வேலுச்சாமி, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம், மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பேனர் வைத்துள்ளார். மேலும் சின்னம்மா அவர்களை வாழ்த்தியும் கழகத்தை வழிநடத்திட வேண்டியும் நிர்வாகிகள் பேனர்களை வைத்துள்ளனர்.

Night
Day