கழகத்தை தலைமையேற்று வழிநடத்த வாருங்கள் - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, தொண்டர்கள் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் களம் காண்போம் என அழைப்பு விடுத்து கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக நிர்வாகிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றவும், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி மெயின் பஜார், சூப்பர் பஜார், இந்திரா நகர், மத்திய பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புரட்சித்தாய் நம்மை ஒன்றிணைக்க.. ஒன்றிணைவோம் வா ஓரணியாய் திரள்வோம் என குறிப்பிட்டு சட்டமன்ற தொகுதி முழுவதும் கழக தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

Night
Day