கழகத்தை தலைமையேற்று வழிநடத்த வாருங்கள் - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுக்கும் தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைய அழைப்பு விடுத்து விழுப்புரம் நகர் பகுதியில் கழக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றவும், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் நகர்பகுதிக்கு உட்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலம், நான்குமுனை சந்திப்பு சாலை, நேருஜி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அஇஅதிமுக பொதுச் செயலாளார் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், புரட்சித்தலைவர், புரட்சிதலைவியின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, புரட்சித்தாய் சின்னம்மா தலைமையேற்று, வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Night
Day