கழக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரிந்து இருக்கும் கழக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழக தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம் என்ற வரியை மேற்கொள்காட்டி இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகுமென தெரிவித்துள்ளார்.

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே என்னும் கழக நிறுவனர், புரட்சித்தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம் என்றும், நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மாண்புமிகு அம்மா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Night
Day