கழக நிர்வாகியின் சகோதரி மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த கழக நிர்வாகியின் சகோதரி மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் பாணாதுறையை சேர்ந்த மனோகரனின் இளைய மகளும், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டத்தலைவர் மனோ. கார்த்திகேஸ்வரனின் சகோதரியுமான அபிராமி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரியை இழந்து வாடும் மனோ.கார்த்திகேஸ்வரனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day