கழக நிர்வாகியின் தந்தை மறைவுக்‍கு சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி புறநகர் மாவட்டம், சிவிலிப்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி P.A. தனபாலின் தந்தை மறைவுக்‍கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருச்சி புறநகர் மாவட்டம், சிவிலிப்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.P.A. தனபாலின் தந்தை P. பூசாரி அயித்தான் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது தந்தையை இழந்து வாடும் திரு.P.A. தனபாலுக்‍கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

varient
Night
Day