கழக நிர்வாகியின் தந்தை மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க உறுப்பினருமான ஏ.எஸ்.முருகனின் தந்தை செல்வம் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் வலைதளபக்கத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க  உறுப்பினருமான ஏ.எஸ்.முருகனின் தந்தை செல்வம் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
தந்தையை இழந்து வாடும் ஏ.எஸ்.முருகன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day