கழக நிர்வாகியின் பாட்டி மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காடபாளையத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி சி. பாலகிருஷ்ணனின் பாட்டியின் மறைவுக்‍கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்த திரு.K.ஜெகதீஷின் தாயாரும், கழக மாவட்ட மாணவரணி பொருளாளர் திரு. சி.பாலகிருஷ்ணனின் பாட்டியுமான K. சுப்பாயம்மாள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது பாட்டியை இழந்து வாடும் திரு.சி.பாலகிருஷ்ணனுக்‍கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day