கழக நிர்வாகியின் மறைவுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம், முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், 22ஆவது வார்டு கிளைக்கழக செயலாளருமான வி. சேட்டு மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் மாவட்டம், முன்னாள் நகரமன்ற உறுப்பினரும்,  மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளரும், 22ஆவது வார்டு கிளைக்கழக செயலாளருமான வி. சேட்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் சேட்டுவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day