கழக நிர்வாகி மகன் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் நகர கழக துணைச் செயலாளார் ராஜேந்திரனின் மகன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் மாவட்ட கழக மூத்த முன்னோடி மறைந்த செல்வராஜின் பேரனும், விழுப்புரம் நகர கழக துணைச் செயலாளர் பிபிஎஸ். ராஜேந்திரனின் மகனுமான பாலாஜி என்கிற ஆர்.வைத்தீஸ்வரன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு. பிபிஎஸ். ராஜேந்திரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day