கழக நிர்வாகி மறைவு - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், மணலூரைச் சேர்ந்த கிளைக் கழகச் செயலாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியை அடுத்த மணலூரை சேர்ந்த மணலூர் கிளைக் கழக செயலாளர் M.பழனிவேல் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

கழக நிர்வாகி பழனிவேலை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத்தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day