கழக நிர்வாகி மறைவு - சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கழக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், குன்னூர் நகரமன்ற முன்னாள் தலைவருமான  டாக்டர் C.கோபாலகிருஷ்ணன் மறைவுக்‍கு அஇஅதிமுக பொதுச்​செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கழக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், குன்னூர் நகரமன்ற முன்னாள் தலைவருமான Dr.C.கோபாலகிருஷ்ணன் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கழக நிர்வாகி கோபாலகிருஷ்ணனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழக தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day