கழக நிர்வாகி மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முன்னாள் சேர்மனும், கழக எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளருமான காசித்துரைப்பாண்டியன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளபக்கத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முன்னாள் சேர்மனும், கழக எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளருமான காசித்துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தி  மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  காசித்துரைப்பாண்டியனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day