கழக நிர்வாகி A.M. அலிகான் பஷீர் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை 63வது வார்டு மாமன்ற முன்னாள் உறுப்பினரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி கழக முன்னாள் செயலாளருமான A.M. அலிகான் பஷீர் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், சென்னை 63வது வார்டு மாமன்ற முன்னாள் உறுப்பினரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி கழக முன்னாள் செயலாளருமான A.M. அலிகான் பஷீர் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். அன்பு சகோதரர் அலிகான் பஷீரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day