கழக முன்னாள் எம்.எல்.ஏ. தா. மலரவன் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை முன்னாள் மேயரும், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தா. மலரவன் மறைவுக்‍கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை முன்னாள் மேயரும், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான திரு. தா.மலரவன், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

திரு. மலரவனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day