கவரப்பேட்டை ரயில் விபத்துக்கான காரணம் "சதிச்செயலே"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் மேலும் ஒரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 11ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்ட பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. லூப்லைன் சந்திப்பில் போல்ட், நட் கழற்றப்பட்டதே விபத்திற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 


Night
Day