காஞ்சிபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கிராமத்தில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தாம்பரம் விமான நிலையத்தில் இருந்து கேப்டன் சஞ்சீவ், நீரஜ் ஆகியோர் ஹெலிகாப்டரில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டரை உத்திரமேரூர் அருகே உள்ள எடமச்சி கிராமத்தில் அவசர அவசரமாக தரையிறக்கி உள்ளனர். தொடர்ந்து தகவல் அறிந்து மற்றொரு ஹெலிகாப்டரில் சென்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் 5 பேர் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் தரையிறங்கிய ஹெலிகாப்டரை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

varient
Night
Day