காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 காவல் ஆய்வாளர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை தொடர்பான விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கொலையான  நபருக்கு 17 வயது என்று போலீசார் தெரிவித்ததால், வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதி செம்மல் தெரிவித்தார். மேலும் குற்றம் நடந்தபோது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மற்றும் விநாயகம் ஆகியோர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 

Night
Day