காஞ்சிபுரம்: வைக்கோல் ஏற்றிய வாகனம் மீது மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரத்தை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே வைக்கோல் ஏற்றியபோது வாகனம் மீது மின் கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வயல் வெளியிலிருந்து வாகனத்தில் ஏற்றி வைக்கப்பட்ட வைக்கோல் மீது மின் கம்பி உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

varient
Night
Day