காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தி சிலைக்கு மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் விழா சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்றவையும் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து காந்தியடிகளின் திருவுருவ படம் மற்றும் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Night
Day