காவல்துறையினருக்கு மன அழுத்த பிரச்சனையிலிருந்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகிழ்ச்சி திட்டத்தின் மூலம் ஏராளமான காவல்துறையினர் பயன்பெற்றுள்ளதாக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவலர்களுக்கான மனநல ஆலோசனை மற்றும் காவலர்கள் குடும்பத்திற்கான மனநல மைய மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில், தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு மகிழ்ச்சி திட்டத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவா், மன அழுத்தம் என்பது தன்னை மட்டுமின்றி தனது குடும்பத்தினரை பாதிக்கும் நிலை உருவாகிறது என்றும், இதனால் இது போன்ற திட்டங்கள் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறினார். 

Night
Day