காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில பிரச்சனை வழக்கில் சித்ரா என்பவரை கைது செய்ததில் மனித உரிமை மீறப்பட்டதாக  கூறி அவருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், அந்த தொகையை சித்ராவை கைது செய்த எம்கேபி நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பத்மாவதி, சிபிசிஐடி ஆய்வாளர் கல்வியரசனிடம் வசூலிக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி கல்வி அரசனும், பத்மாவதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சுந்தர் மற்றும்  செந்தில்குமார் அமர்வு,  காவல் துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாவதாகக் கூறி, மனித உரிமை ஆணைய உத்தரவை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தது.

Night
Day