காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 413 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்‍கும் நிலையில்,  496 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்‍கப்பட்டுள்ளது. இதேபோன்று கபிணி அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 321 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, அணையிலிருந்து 2 ஆயிரத்து 917 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரத்து 413 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Night
Day