கிருஷ்ணகிரி: அரசு பள்ளி ஆண்டு விழாவில் அரசியல் செய்த திமுக பிரமுகர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவில் அரசியல் செய்த திமுக பிரமுகர்களுடன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூளகிரி அடுத்த பாத்தக்கோட்டா பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதற்காக பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், திமுக பிரமுகர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவரான நௌசாத் என்பவரின் பெயர் இடம் பெறவில்லை. இதனால், ஆத்திரமடைந்த நௌசாத், திமுக பிரமுகர்களுடன் அரசு பள்ளி ஆண்டு விழாவிலேயே அரசியலா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

Night
Day