கிருஷ்ணகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அட்டகுறுக்கி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள், அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. மேலும், சாலையில் சுற்றித்திரிந்த மாட்டை காட்டு யானை தாக்கியதில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day