கிருஷ்ணகிரி: மாரண்டபள்ளி அருகே ரேஷன் கடையில் வழங்கப்படும் தரமற்ற அரிசி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி ஊராட்சியில் தொட்டூர் பொது வினியோக ரேசன் கடையில் அரிசி ,  பருப்பு,  சர்க்கரை வழங்கப்பட்டது. இதில் தரமான அரிசி வழங்கப்படவில்லை. பாதி நெல் பாதி அரிசி, கல் போன்றவை இருந்துள்ளது. இதே போன்று பள்ளிகளுக்கு வழங்கபடும் அரிசியும் பிள்ளைகள் சாப்பிட முடியாத அளவுக்கு இருப்பதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டினர். 

varient
Night
Day