கிருஷ்ணகிரி: மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில், 3 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன. சாராகாரனூர் கிராமத்தைச் சேர்ந்த மாது, குமரேசன் ஆகியோர் வழக்கம்போல், கால்நடைகளுக்கு தீவனம் வைத்து கட்டிவிட்டு, இரவில் உறங்கச் சென்றுவிட்டனர். இதனிடையே, விடியற்காலை 4 மணிக்கு மாடுகள் அலறியதால், எழுந்துவந்த பார்த்தபோது, மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Night
Day